÷திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி பேரூராட்சியில் 30-ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அத்துடன் பொன்னேரியைச் சுற்றிலும் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ÷பொன்னேரியைச் சுற்றிலும் உள்ள கிராமங்கள் மற்றும் பொன்னேரி நகரினுள் வசிக்கும் மக்கள் சென்னை கடற்கரை, சென்னை சென்ட்ரல், பூக்கடை, திருவொற்றியூர், வண்ணாரப்பட்டை, ராயபுரம், கொருக்குப்பேட்டை, பேசின்பாலம் ஆகிய பகுதிகளுக்கு சென்னை-கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயிலில் சென்று வருவர்.