இந்நிலையில் கடந்த 5 மாதங்களாக வறண்டு கிடந்த வீராணம் ஏரியில் தற்போது 43 அடி (மொத்தக் கொள்ளளவு 47.50) நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. ஏரியிலிருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கவில்லை, தற்போது நடவுள்ள சம்பா சாகுபடிக்கு நாற்றாங்கல் நடுவதற்கும் தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. ஆனால் சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனத்துக்கு ஜூலை 10-ம் தேதி முதல் விநாடிக்கு 76 கனஅடி நீர் அனுப்பப்பட்டு வருகிறது. இதுகுறித்து கொள்ளிடம் வடிநில கோட்ட பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டு கேட்ட போது, கொள்ளிடம் இடதுகரை பலப்படுத்தும் பணிக்காக வீராணம் ஏரியிலும், பொன்னேரியிலிருந்தும் மண் எடுóப்பதால் குறுவை சாகுபடிக்கு நீர் திறந்து விடப்படவில்லை. தற்போது சம்பா சாகுபடிக்கு நீர் திறந்துவிடும்படி விவசாயிகள் யாரும் கேட்கவில்லை என தெரிவித்தார்.