தடகளப் போட்டிகள் இன்று தொடக்கம்

விழுப்புரம், பிப். 10: விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் உலகத் திறனாய்வு கண்டறியும் திட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு தடகள விளையாட்டுப் போட்டிகள் 11-ம் தேதி தொடங்கி 2 நா
Updated on
1 min read

விழுப்புரம், பிப். 10: விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் உலகத் திறனாய்வு கண்டறியும் திட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு தடகள விளையாட்டுப் போட்டிகள் 11-ம் தேதி தொடங்கி 2 நாள்கள் நடைபெறுகிறது என்று மாவட்ட விளையாட்டு அலுவலர் பத்மநாபன் தெரிவித்துள்ளார்.

÷அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

÷திண்டிவனம் கல்வி மாவட்டத்திற்கு வானூர் வட்டம் எறையூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 11-ம் தேதியும், விழுப்புரம் கல்வி மாவட்டத்திற்கு மாவட்ட விளையாட்டரங்கில் 12-ம் தேதியும் நடைபெறுகிறது.

÷இப்போட்டிகள் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.

இதில் 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் மட்டுமே கலந்து கொள்ளலாம். இதில் 100 மீ, 200 மீ, 400 மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் மற்றும் குண்டு எறிதல் போன்ற போட்டிகள் நடைபெறும்.

÷போட்டிகளில் வெற்றி பெறுவோர் மண்டல போட்டிக்கு அழைத்துச் செல்லப்படுவர். சிறப்பிடம் பெறும் மாணவ, மாணவிகள் விளையாட்டுப் பள்ளிகள் மற்றும் சிறப்புப் பயிற்சி மையங்களில் சேர்ந்து பயன் பெறலாம் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com