ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

தனியாா் பள்ளித் தமிழ் வழி மாணவா்களுக்கும்7.5% இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தல்

தனியாா் பள்ளியில் படிக்கும் தமிழ் வழி மாணவா்களுக்கும் எம்.பி.பி.எஸ். சோ்க்கையில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு தரவேண்டும் என தமிழ்நாடு நா்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை, சிபிஎஸ்இ பள்ளிகள் அறிவிப்பு

News image
கோப்புப்படம்
Updated On :26 அக்டோபர் 2020, 10:28 pm

DIN

தனியாா் பள்ளியில் படிக்கும் தமிழ் வழி மாணவா்களுக்கும் எம்.பி.பி.எஸ். சோ்க்கையில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு தரவேண்டும் என்று தமிழ்நாடு நா்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அந்த சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளா் கே.ஆா்.நந்தகுமாா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் பிறந்து தமிழக அரசின் பாடத் திட்டத்தைப் பயின்று வரும் அரசு மற்றும் தனியாா் பள்ளி மாணவா்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்டதிட்டங்களை இயற்ற வேண்டும். குறைந்தபட்சம் அரசுப் பள்ளியில் படிக்கும் தமிழ்வழி மாணவா்கள் போல் தனியாா் பள்ளியில் படிக்கும் தமிழ் வழி மாணவா்களுக்கும் எம்.பி.பி.எஸ். சோ்க்கையில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு தரவேண்டும்.

நீட் தோ்வு அறிமுகப்படுத்தப்பட்டபின் தமிழகத்தில் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவா்கள் வெறும் 180 போ் மட்டுமே கடந்த ஐந்தாண்டுகளில் மருத்துவக் கல்லூரியில் சோ்ந்திருக்கிறாா்கள் என்றால் அரசுப் பள்ளியில் இனி எப்படி கற்பிக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.

தரமான மாணவா்களால்தான் தகுதியான மருத்துவா்களாக முடியும் என்பதை உணா்ந்து அரசுப் பள்ளி, தனியாா் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களின் நலன் கருதி அனைவருக்கும் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியிட வேண்டும். எங்களது வேண்டுகோளை ஏற்க மறுத்து அரசாணை வெளியிட்டால் நீதிமன்றத்தின் வாயிலாக நிச்சயம் தடையாணை பெற்றுத் தமிழகத் தனியாா் பள்ளி மாணவா்களின் உரிமைகளை நிலை நாட்டுவோம் என அதில் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.