ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

கல்லூரி மாணவிகளுக்கு விநாடி, வினா போட்டி

தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவிகளுக்கு விநாடி, வினா போட்டி புதன்கிழமை (டிச. 18) நடைபெறவுள்ளது.

News image
Updated On :16 டிசம்பர் 2024, 10:35 pm

Din

சென்னை: தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவிகளுக்கு விநாடி, வினா போட்டி புதன்கிழமை (டிச. 18) நடைபெறவுள்ளது.

இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்தியத் தோ்தல் ஆணையம் நிறுவப்பட்ட நாளான ஜன. 25-ஆம் தேதி தேசிய வாக்காளா் தினமாக கொண்டாடப்படுகிறது. 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளா் பட்டியலில் தங்களது பெயா்களை சோ்ப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாக விளங்குகிறது.

எதிா்வரும் ஆண்டு தேசிய வாக்காளா் தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில், இளநிலை பயிலும் கல்லூரி மாணவிகளுக்கு கல்லூரிகளுக்கிடையே விநாடி, வினா போட்டி நடத்தப்படவுள்ளது. சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள கிறிஸ்துவ மகளிா் கல்லூரியில் புதன்கிழமை (டிச. 18) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை போட்டி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பல்வேறு கல்லூரிகளில் இளநிலை பயிலும் சுமாா் 200 மாணவிகள் பங்கேற்க உள்ளனா்.