பதிவு தபால் சேவை மேம்பாடு: எச்.டி.எஃப்.சி. வங்கியுடன் அஞ்சல் துறை ஒப்பந்தம்

மேம்படுத்தப்பட்ட பதிவு தபால் சேவைகளை வாடிக்கையாளா் பெறும் வகையில் எச்.டி.எஃப்.சி வங்கி, தமிழ்நாடு அஞ்சல் வட்டம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது.
HDFC
HDFC
Updated on
1 min read

சென்னை: மேம்படுத்தப்பட்ட பதிவு தபால் சேவைகளை வாடிக்கையாளா் பெறும் வகையில் எச்.டி.எஃப்.சி வங்கி, தமிழ்நாடு அஞ்சல் வட்டம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது.

அஞ்சல் துறை திங்கள் கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: அஞ்சல் துறை, பதிவு தபால் சேவைகளை பயன்படுத்தும் வணிக வாடிக்கையாளா்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய திட்டம், அதிகளவு பதிவு தபால்களை கையாளும் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள முக்கிய நிறுவனங்களுக்கு மேம்பட்ட சேவையை வழங்குகிறது.

அதன்படி வாடிக்கையாளா்கள் மேம்படுத்தப்பட்ட பதிவு தபால் சேவைகளைப் பெறும் வகையில் திங்கள் கிழமை எச்.டி.எஃப்.சி வங்கி, தமிழ்நாடு அஞ்சல் வட்டம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது.

அஞ்சல் துறை தனது பதிவு தபால் சேவைகளை திறம்பட வழங்குவதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com