சென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!மதுரை அருகே அரசு பேருந்தும் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதல்: 5 பேர் பலி எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது! தமிழ்நாட்டில் பொறியியல் கலந்தாய்வு தொடங்கியது! விம்பிள்டன் டென்னிஸ்: சின்னர் மீண்டும் சாம்பியன் எழுத்தாளர் பூமணி காலமானார்
/

பதிவு தபால் சேவை மேம்பாடு: எச்.டி.எஃப்.சி. வங்கியுடன் அஞ்சல் துறை ஒப்பந்தம்

மேம்படுத்தப்பட்ட பதிவு தபால் சேவைகளை வாடிக்கையாளா் பெறும் வகையில் எச்.டி.எஃப்.சி வங்கி, தமிழ்நாடு அஞ்சல் வட்டம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது.

News image

HDFC

Updated On :3 செப்டம்பர் 2024, 6:43 am IST

சென்னை: மேம்படுத்தப்பட்ட பதிவு தபால் சேவைகளை வாடிக்கையாளா் பெறும் வகையில் எச்.டி.எஃப்.சி வங்கி, தமிழ்நாடு அஞ்சல் வட்டம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது.

அஞ்சல் துறை திங்கள் கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: அஞ்சல் துறை, பதிவு தபால் சேவைகளை பயன்படுத்தும் வணிக வாடிக்கையாளா்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய திட்டம், அதிகளவு பதிவு தபால்களை கையாளும் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள முக்கிய நிறுவனங்களுக்கு மேம்பட்ட சேவையை வழங்குகிறது.

அதன்படி வாடிக்கையாளா்கள் மேம்படுத்தப்பட்ட பதிவு தபால் சேவைகளைப் பெறும் வகையில் திங்கள் கிழமை எச்.டி.எஃப்.சி வங்கி, தமிழ்நாடு அஞ்சல் வட்டம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது.

அஞ்சல் துறை தனது பதிவு தபால் சேவைகளை திறம்பட வழங்குவதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.