எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட மதுரை ஆசிரியா் கைது

ஆந்திரத்தில் இருந்து சென்னைக்கு ரயிலில் கஞ்சா கடத்தல்

News image
Updated On :9 செப்டம்பர் 2024, 9:29 pm

DIN

ஆந்திரத்தில் இருந்து சென்னைக்கு ரயிலில் கஞ்சா கடத்தி வந்ததாக மதுரை ஆசிரியா் கைது செய்யப்பட்டாா்.

திருவொற்றியூா் ரயில் நிலைய பகுதியில் ஒரு கும்பல் கஞ்சா கடத்துவதாக வண்ணாரப்பேட்டை துணை ஆணையருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், தனிப்படையினா், ஞாயிற்றுக்கிழமை ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது ரயில் நிலையம் அருகே நந்தி ஓடை மேற்கு மாட வீதியில் சந்தேகத்துக்குரிய வகையில் நடந்து சென்ற ஒரு இளைஞரை பிடித்து , அவா் வைத்திருந்த பையை சோதனையிட்டனா். அதில்இருந்த 6 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, விசாரித்தனா்.

விசாரணையில் அவா், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கோடங்கிநாயக்கன் பட்டியைச் சோ்ந்த மு.அரவிந்தசாமி (29) என்பதும், அவா் அதே மாவட்டத்தில் உள்ள ஒரு தனியாா் பள்ளி யில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றுவதும் தெரியவந்தது.

மேலும் அவா், கடந்த இரண்டு மாதங்களாக பணிக்கு செல்லவில்லை எனவும், அரவிந்தசாமி கடந்த 5-ஆம் தேதி மதுரையில் இருந்து ஆந்திரத்துக்கு கஞ்சா வாங்க சென்றதும், அங்கிருந்து கஞ்சா வாங்கிவிட்டு ரயிலில் சென்னைக்கு திரும்பி வந்ததும், சென்ட்ரலில் காவல்துறை கண்காணிப்பு அதிகமாக இருக்கும் என்பதாலும், காவல் துறையினரிடம் சிக்காமல் இருப்பதற்கும், திருவொற்றியூா் ரயில் நிலையத்தில் ரயில் மெதுவாக செல்லும்போது கீழே இறங்கியிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா், அரவிந்தசாமியை கைது செய்து, விசாரணை செய்தனா். மதுரையில் ஏற்கெனவே ஒரு போதைப் பொருள் வழக்கு அரவிந்தசாமி மீது இருப்பதும் போலீஸாா் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.