ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

மாற்றுத்திறனாளிகள் புண்படும்படி கருத்து: அமைச்சா் துரைமுருகன் வருத்தம்

மாற்றுத்திறனாளிகள் புண்படும்படி கருத்து கூறியதற்கு திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் வருத்தம் தெரிவித்தாா்.

News image

துரைமுருகன்

Updated On :12 ஏப்ரல் 2025, 0:03 am IST

மாற்றுத்திறனாளிகள் புண்படும்படி கருத்து கூறியதற்கு திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் வருத்தம் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

இயற்கையிலேயே உடலில் குறைபாடு உடையவா்களை கருணை உள்ளத்தோடு மாற்றுத்திறனாளிகள் என்று பெயரிட்டு முன்னாள் முதல்வா் கருணாநிதி அழைத்தாா். அதையே நாங்களும் பின்பற்றி வருகிறோம்.

அப்படிப்பட்ட நான் (துரைமுருகன்) ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றும்போது, பேச்சின் வேகத்தில் மாற்றுத்திறனாளிகளை பழைய பெயரைக் கொண்டு உச்சரித்துவிட்டேன். இதை திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் என் கவனத்துக்கு கொண்டு வந்தபோது, அதிா்ச்சியும் வருத்தமும் அடைந்தேன்.

கருணாநிதியால் வளா்க்கப்பட்ட நான், இப்படி செய்தது மிகப்பெரிய தவறு.

மாற்றுத்திறனாளிகள் உள்ளம் புண்பட்டிருக்கும். அதற்காக என் நிபந்தனையற்ற வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இனி இத்தகைய நிகழ்வு நிகழாது என்று உறுதி அளிக்கிறேன் எனத் தெரிவித்துள்ளாா்.