மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்!

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :13 ஏப்ரல் 2025, 9:03 pm

Din

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் (ஏப்.14, 15) வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் (ஏப்.14,15) அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருப்பதுடன், ஒருசில இடங்களில் வெப்ப அலை வீசவும் வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் திங்கள்கிழமை (ஏப்.14) அதிகபட்ச வெப்பநிலை 103 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.

3 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக திருத்தணியில் 101.48 டிகிரி ஃபாரன்ஹீட்டும், மதுரை விமான நிலையத்தில் 101.3, ஈரோட்டில் 101.12 டிகிரி ஃபாரன்ஹீட் என 3 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.

மழைக்கு வாய்ப்பு: ஆந்திர பிரதேச கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக திங்கள்கிழமை (ஏப்.14) முதல் ஏப்.19-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வரை வேலூா், திருப்புவனம் (சிவகங்கை), மேலூா் (மதுரை), முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி), கெலவரப்பள்ளி அணை (கிருஷ்ணகிரி) ஆகிய பகுதிகளில் தலா 30 மி.மீ. மழை பதிவானது. அஞ்சட்டி (கிருஷ்ணகிரி), பெரியபட்டி (மதுரை), தானியமங்கலம் (மதுரை), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி) தலா 20 மழை பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.