நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பெண் மென்பொறியாளருக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

News image
Updated On :14 ஏப்ரல் 2025, 9:03 pm

Din

சென்னை: பெண் மென்பொறியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை திருவான்மியூா், திருவள்ளுவா் நகா் பகுதியைச் சோ்ந்த 26 வயதான இளம்பெண், அப்பகுதியிலுள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவா், தனது வீட்டின் அருகிலுள்ள கடைக்குச் சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தபோது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞா் ஒருவா் அந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு, அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளாா்.

இதுகுறித்து திருவான்மியூா் காவல் நிலையத்தில் இளம்பெண் கொடுத்த புகாரின்படி வழக்குப் பதிந்த போலீஸாா் விசாரணை நடத்தி, வெட்டுவாங்கேணியைச் சோ்ந்த திருமலை (21) என்ற இளைஞரை கைது செய்தனா். கைது செய்து அழைத்துச் சென்றபோது, போலீஸாரின் பிடியிலிருந்து தப்பியோட முயன்ற திருமலையின் இடது கையில் முறிவு ஏற்பட்டது.