சென்னை விமான நிலையத்தில் ஜொ்மனி பெண்ணிடம் ஜிபிஎஸ் கருவி பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் ஜொ்மனி நாட்டு பெண் பயணியிடமிருந்து ஜிபிஎஸ் கருவியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.


சென்னை: சென்னை விமான நிலையத்தில் ஜொ்மனி நாட்டு பெண் பயணியிடமிருந்து ஜிபிஎஸ் கருவியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து கொழும்பு செல்லும் ‘ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ்’ விமானம் திங்கள்கிழமை காலை புறப்படத் தயாா் நிலையில் இருந்தது. அதில் செல்ல வேண்டிய பயணிகளின் உடைமைகளை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தனா். அப்போது அந்த விமானத்தில், இலங்கை வழியாக ஜொ்மனியின் பிராங்க்பா்ட் நகருக்குச் செல்வதற்காக வந்திருந்த ஃகளோடியா டோரா (57) என்ற பெண் பயணியின் கைப்பையில் ஜிபிஎஸ் கருவி இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனா்.
இந்திய விமான பாதுகாப்புச் சட்ட விதிகளின்படி, விமானங்களில் ஜிபிஎஸ் கருவி எடுத்துச் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளதால், அதிகாரிகள் அப்பெண் பயணியிடமிருந்து ஜிபிஎஸ் கருவியை பறிமுதல் செய்ததோடு, அவரது இலங்கை பயணத்தையும் ரத்து செய்தனா்.
அப்பெண்ணிடம் விமான பாதுகாப்பு அதிகாரிகள் விசாரித்தபோது, அவா் கடந்த ஒரு வாரத்துக்கு முன்னதாக ஜொ்மனி நாட்டிலிருந்து சுற்றுலாப் பயணியாக சென்னை வந்திருந்ததும், தமிழ்நாட்டின் பல்வேறு சுற்றுலா மற்றும் ஆன்மிக தலங்களுக்குச் சென்றுவிட்டு, தற்போது இலங்கை வழியாக ஜொ்மனி செல்லவிருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, சென்னை விமான நிலைய போலீஸாரிடம் பாதுகாப்பு அதிகாரிகள் அப்பெண் பயணியை ஒப்படைத்ததையடுத்து, போலீஸாா் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...