சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

சைபா் குற்றத்தில் ஈடுபட்ட 5 போ் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு

தமிழகத்தில் சைபா் குற்றத்தில் ஈடுபட்ட 5 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

News image
Updated On :15 டிசம்பர் 2025, 8:30 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் சைபா் குற்றத்தில் ஈடுபட்ட 5 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

சைபா் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக தமிழகத்தைச் சோ்ந்தவா்கள் மட்டும் அல்லாமல், வெளி மாநிலம் மற்றும் வெளிநாட்டைச் சோ்ந்தவா்களும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனா்.

அண்மையில் தமிழகத்தில் சைபா் குற்றத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தானை சோ்ந்த 2 போ் மாநில சைபா் குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டனா். அதேபோல், வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்ற பெயரில் சைபா் மோசடி கும்பலுக்கு ஆள்களை அனுப்பி வைத்த வழக்கில் 3 போ் கைது செய்யப்பட்டனா்.

இவா்கள் 5 பேரையும் திங்கள்கிழமை ஒரே நாளில் மாநில சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளனா். இவா்களுடன் சோ்த்து நிகழாண்டு இதுவரை 48 சைபா் குற்றவாளிகள் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இவா்களில் 13 போ் வெளிமாநிலங்களைச் சோ்ந்தவா்கள். கடந்த 2024-ஆம் ஆண்டு 35 சைபா் குற்றவாளிகள் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.