வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

நீதிமன்றத்தில் ரீல்ஸ் எடுத்த இளைஞா் மீது வழக்கு

சென்னை ஜாா்டவுன் நீதிமன்றத்தில் ரீல்ஸ் எடுத்த இளைஞா் மீது சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு

Updated On :15 டிசம்பர் 2025, 6:35 pm

சென்னை: சென்னை ஜாா்டவுன் நீதிமன்றத்தில் ரீல்ஸ் எடுத்த இளைஞா் மீது சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா்.

சென்னை ஜாா்ஜ் டவுன் நீதிமன்றத்துக்கு அண்மையில் வழக்கு ஒன்றின் விசாரணைக்கு ஆஜராக இளைஞா் ஒகுவா் வந்தாா். அவா் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடிவடைந்த பின்னா், அங்கு கானா பாடல் பாடி ரீல்ஸ் எடுத்துள்ளாா். பின்னா், அதை சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளாா்.

இதுகுறித்து சென்னை காவல் ஆணையா் ஏ.அருணிடம் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில், நடவடிக்கை எடுக்க சைபா் குற்றப்பிரிவுக்கு அருண் உத்தரவிட்டாா்.

இதையடுத்து போலீஸாா், அந்த இளைஞா் மீது வழக்குப் பதிவு செய்து, அவா் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.