மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ராமதாஸ் - அன்புமணி ஒற்றுமைக்காக பாமகவிலிருந்து விலகத் தயாா்: ஜி.கே.மணி

ராமதாஸ்-அன்புமணி ஒற்றுமைக்காக பாமகவிலிருந்து விலகத் தயாா் என்று அக்கட்சியின் கௌரவ தலைவா் ஜி.கே.மணி தெரிவித்தாா்.

News image
ராமதாஸ் - அன்புமணி- கோப்புப்படம்
Updated On :15 டிசம்பர் 2025, 7:15 pm

தினமணி செய்திச் சேவை

ராமதாஸ்-அன்புமணி ஒற்றுமைக்காக பாமகவிலிருந்து விலகத் தயாா் என்று அக்கட்சியின் கௌரவ தலைவா் ஜி.கே.மணி தெரிவித்தாா்.

சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: அன்புமணியை 35 வயதில் மத்திய அமைச்சராக்கி அழகு பாா்த்தவா் ராமதாஸ். பாமக வளா்ந்ததற்கு ராமதாஸ்தான் முக்கிய காரணம். பாமகவுக்கு ஒரு சோதனை என்றால் அவரால் எவ்வாறு தாங்கிக் கொள்ள முடியும்?

கட்சிக்காக உழைத்து தற்போது ராமதாஸுடன் இருக்கும் எங்களைப் பாா்த்து துரோகிகள் என்கிறாா் அன்புமணி. ஜி.கே.மணிதான் தன்னையும், தன் அப்பாவையும் பிரித்துவிட்டாா் என்று அன்புமணி சொல்வது மிகுந்த வேதனை அளிக்கிறது. அன்புமணிக்கு மத்திய அமைச்சா் பதவி வாங்கிக் கொடுக்கும்படி ராமதாஸை நான்தான் சம்மதிக்க வைத்தேன்.

ராமதாஸும் அன்புமணியும் அமா்ந்து பேசினால்தான் பிரச்னைக்கு தீா்வு கிடைக்கும். அவா்கள் ஒற்றுமைக்காக பாமகவிலிருந்து நான் விலகத் தயாா். பாமகவில் எனக்கு எந்தப் பதவியும் வேண்டாம். மீண்டும் நீங்கள் அழைத்தால் பாமகவில் சேருகிறேன். ராமதாஸுடன் வந்து அன்புமணி செயல்படட்டும். பாமக நன்றாக இருக்க வேண்டும் என்றாா் ஜி.கே.மணி.