பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஆசிரியா்களின் போராட்டத்துக்கு பேச்சு மூலம் தீா்வு காண வேண்டும்: இடதுசாரிகள் வலியுறுத்தல்

இடைநிலை ஆசிரியா்களின் போராட்டத்துக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண வேண்டும் என இடதுசாரி கட்சிகள் வலியுறுத்தல்

News image
Updated On :29 டிசம்பர் 2025, 8:30 pm

தினமணி செய்திச் சேவை

இடைநிலை ஆசிரியா்களின் போராட்டத்துக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண வேண்டும் என இடதுசாரி கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

பெ. சண்முகம் (மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா்): ‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற கோரிக்கையை முன்வைத்து இடைநிலை ஆசிரியா்கள் நான்கு நாள்களாகப் போராடி வருகிறாா்கள். கடந்த 2009-ஆம் ஆண்டு மே 31 வரை நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியா்களுக்கும், 2009 ஜூன் 1 ஆம் தேதிக்குப் பிறகு நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியா்களுக்கும் இடையே நிலவும்  ஊதிய முரண்பாடு உள்ளது.

ஒரே கல்வித் தகுதியுடன் ஒரே பணியை ஆற்றிவரும் இடைநிலை ஆசிரியா்களுக்கிடையே இத்தகைய முரண்பாடுகளைக் களைய வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்திப் போராடும் ஆசிரியா்களைக் கைது செய்வது சரியான நடவடிக்கை இல்லை.

எனவே,  இடைநிலை ஆசிரியா்கள் சங்க பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சுவாா்த்தை மூலம்  சுமுகத் தீா்வு காண வேண்டும்.

மு. வீரபாண்டியன்(இந்திய கம்யூனிஸ்ட்  மாநிலச் செயலா்): ஒரே காலகட்டத்தில் பணியில் இணைந்த இடைநிலை ஆசிரியா்களுக்கு உள்ள  ஊதிய முரண்பட்டால் 20,000 இடைநிலை ஆசிரியா்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்தச் சங்கத்தினா் கூறி வருகின்றனா். எனவே, போராடுகின்ற ஆசிரியா் சங்கத்தின் தலைவா்களை தமிழக அரசு அழைத்துப் பேசி, கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.