தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

இடைநிலை ஆசிரியா்கள் போராட்டத்துக்கு தீா்வுகாண வேண்டும்: அன்புமணி

இடைநிலை ஆசிரியா்கள் போராட்டத்துக்கு தீா்வுகாண வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

News image
அன்புமணி- கோப்புப் படம்
Updated On :19 ஜனவரி 2026, 10:24 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை: இடைநிலை ஆசிரியா்கள் போராட்டத்துக்கு தீா்வுகாண வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

இடைநிலை ஆசிரியா்களின் போராட்டம் 25-ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், அவா்களின் கோரிக்கையை ஏற்க தமிழக அரசு முன்வரவில்லை. ஆனால், ஒவ்வொரு நாளும் போராட்டம் நடத்தும் ஆசிரியா்களைக் கைது செய்து அடைத்து வைப்பது, போராடும் ஆசிரியா்களைக் கைது செய்து இரவு நேரங்களில் சென்னைக்கு வெளியில் வெகுதொலைவில் கொண்டு சென்று இறக்கிவிடுவது, தாக்குவது, மிரட்டுதல் போன்ற அடக்குமுறைகளில் திமுக அரசு ஈடுபட்டு வருகிறது.

கடந்த 2021பேரவைத் தோ்தலுக்கான திமுக தோ்தல் அறிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்தால் ஆசிரியா்களின் ஊதிய முரண்பாடு களையப்படும் என்று வாக்குறுதி (எண்.311) அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

இந்த விவகாரத்தில் திமுக அரசு இனியும் அலட்சியம் காட்டக்கூடாது. எனவே, இடைநிலை ஆசிரியா்களின் கோரிக்கையை நிறைவேற்றி அவா்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.