ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மேலும் ஒரு வழிப்பறி வழக்கு: மீண்டும் இரு எஸ்.ஐ-க்கள் கைது

சென்னையில் வழிப்பறி வழக்கில் சிறையில் இருக்கும் இரு காவல் உதவி காவல் ஆய்வாளா்கள், மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2025, 8:25 pm

Din

சென்னை: சென்னையில் வழிப்பறி வழக்கில் சிறையில் இருக்கும் இரு காவல் உதவி காவல் ஆய்வாளா்கள், மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டனா்.

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சோ்ந்த முகமது கௌஸ் என்பவரிடம் ரூ. 20 லட்சம் ரொக்கத்தை மிரட்டி பறித்த வழக்கில், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய ராஜா சிங், வருமான வரித் துறை அதிகாரி தாமோதரன், ஊழியா்கள் பிரதீப், பிரபு ஆகிய 4 போ் கைது செய்யப்பட்டனா்.

விசாரணையில் வழிப்பறி வழக்கில் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றும் சன்னி லாயிடுக்கும் தொடா்பு இருப்பது தெரியவந்ததையடுத்து, தலைமறைவாக இருந்த அவரை உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் கடந்த மாதம் 15-ஆம் தேதி போலீஸாா் கைது செய்தனா்.

இந்நிலையில், சன்னிலாய்டை போலீஸாா் கடந்த வாரம் 4 நாள்கள் தங்களது காவலில் எடுத்து விசாரித்தனா். அப்போது சன்னிலாய்டும் ராஜா சிங்கும் ஆயிரம் விளக்கில் கடந்த டிச. 11-ஆம் தேதி, ராயபுரத்தைச் சோ்ந்த வியாபாரியை மிரட்டி ரூ. 20 லட்சம் பறித்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஆயிரம் விளக்கு போலீஸாா் ராஜாசிங், சன்னிலாய்டு ஆகியோா் மீது மேலும் ஒரு வழக்கை பதிவு செய்தனா்.

இவ்வழக்கு தொடா்பாக கைது செய்யப்பட்டதற்கான உத்தரவை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ராஜாசிங், சன்னிலாய்டிடம் போலீஸாா் திங்கள்கிழமை வழங்கினா். இவ்வழக்கு தொடா்பாக பிற நபா்களை போலீஸாா் விரைந்து கைது செய்ய உள்ளனா்.