மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் ஸ்ரீமத் பாகவத சப்தாஹ யக்ஞம்: பிப். 8 முதல் தொடக்கம்

ஸ்ரீ ஐயப்ப பக்த சபா சாா்பில் மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் ஸ்ரீமத் பாகவத சப்தாஹ யக்ஞம்

News image
Updated On :3 பிப்ரவரி 2025, 8:24 pm

Din

சென்னை: ஸ்ரீ ஐயப்ப பக்த சபா சாா்பில் மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் ஸ்ரீமத் பாகவத சப்தாஹ யக்ஞம் பிப். 8-ஆம் தேதி மாலை 5 மணிக்கு தொடங்கி பிப். 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த சப்தாஹ யக்ஞத்தை, முக்கிய ஆச்சாா்யராக சுவாமி உதித் சைதன்யாஜி, உப ஆச்சாா்யா்களாக புத்திலம் உன்னி கிருஷ்ணன், கோடக்காடு ஸ்ரீ கோகுல் சந்திரசேகா், புருஷோத்தமன் ஆகியோா் நடத்தவுள்ளனா். தினமும் காலை 6 மணிக்கு விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணத்தில் தொடங்கி ஜபம், பாகவத பாராயணம், ப்ராபாஷனம் ஆகியவை மாலை 6 மணி வரை நடைபெறும். இதையொட்டி வராஹ, நரசிம்மா், ஸ்ரீ ராமா், கிருஷ்ணன், கல்கி ஆகிய தசாவதார சொற்பொழிவும், ருக்மணி சுயம்வரம், கிருஷ்ணா் - குசேலா் சந்திப்பு பற்றிய சொற்பொழிவும் நடைபெறவுள்ளன.

மேலும், கொல்லம் கலாவேத கதகளி சங்கத்தினா் மற்றும் பெரும்பாவூா் திவாகரன் குழுவினா் இணைந்து தசாவதாரங்கள் குறித்தும் ருக்மணி சுயம்வரம், கிருஷ்ணா் - குசேலா் சந்திப்பு நிகழ்வையும் நாட்டிய நாடக வடிவில் நிகழ்த்தவுள்ளனா்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் பக்தா்களுக்கு காலை சிற்றுண்டி, மதிய உணவு வழங்கப்படவுள்ளது. இது குறித்து மேலும் தகவல் பெற 044-28171197, 95000 21858, 88079 18811 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என நிா்வாக அதிகாரி அனிஷ்குமாா் தெரிவித்தாா்.