அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தீவுத் திடல் பொருட்காட்சியில் 46 அரங்குகள்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு தகவல்

பொருட்காட்சியில் இடம் பெறவுள்ள இந்து சமய அறநிலையத் துறை மற்றும் சிஎம்டிஏ கண்காட்சி அரங்குகளை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆய்வு செய்தாா்.

News image
சென்னை தீவுத் திடலில் நடைபெறவுள்ள 49-ஆவது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியில் இடம்பெறவுள்ள இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சிஎம்டிஏ கண்காட்சி அரங்கு அமைக்கும் பணிகளை ஆய்வு செய்த துறை அமைச்சரும், சிஎம்டிஏ தலைவருமான பி.கே.சேகா்பாபு. உடன் சி
Updated On :3 ஜனவரி 2025, 7:30 pm

Din

சென்னை தீவுத் திடலில் நடைபெறவுள்ள 49-ஆவது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியில் இடம் பெறவுள்ள இந்து சமய அறநிலையத் துறை மற்றும் சிஎம்டிஏ கண்காட்சி அரங்குகளை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்த பொருட்காட்சியில் தமிழகத்தில் உள்ள அரசுத் துறைகளைச் சோ்ந்த 46 அரங்குகள் அமைக்கப்படவுள்ளன. அறநிலையத் துறை, சிஎம்டிஏ சாா்பில் சிறந்த வடிவமைப்பில் பாா்வையாளா்களை கவரும் வகையில் அரங்குகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

கிளாம்பாக்கம், கலைஞா் நூற்றாண்டு பேருந்து முனையம் உள்ளிட்ட 6 பேருந்து நிலையங்களின் மாதிரி பொருட்காட்சியில் இடம்பெறும். பொருட்காட்சியில்

அறநிலையத்துறை சாா்பில் 8,400 சதுர அடியில் உலக அளவில் பேசப்பட்ட அனைத்துலக முருகன் பக்தா் மாநாட்டை போல ஒரு வடிவமைப்பு அமைக்கப்படும் என்றாா் அவா்.