47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பெரம்பூா் தெற்கு ரயில்வே மருத்துவமனையில் அதிநவீன அறுவை சிகிச்சை அரங்குகள் திறப்பு

சென்னை பெரம்பூரில் உள்ள தெற்கு ரயில்வே மருத்துவமனையில் 15 அதிநவீன அறுவை சிகிச்சை அரங்குகளை, ரயில்வே சுகாதார சேவைத் துறை இயக்குநா் ஜெனரல் மருத்துவா் மன்சிங் திறந்து வைத்தாா்.

News image
சென்னை பெரம்பூரில் உள்ள புதிய தெற்கு ரயில்வே மருத்துவமனையில் 15 அதிநவீன அறுவை சிகிச்சை அரங்குகளையும், 4 தீவிர சிகிச்சை பிரிவு மையங்களையும் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா் ரயில்வே சுகாதார சேவைத் துறையின் இயக்குநா் ஜெனரல் மருத்துவா் மன்சிங். உடன் தெற்கு
Updated On :3 ஜனவரி 2025, 7:23 pm

Din

சென்னை பெரம்பூரில் உள்ள தெற்கு ரயில்வே மருத்துவமனையில் 15 அதிநவீன அறுவை சிகிச்சை அரங்குகளை, ரயில்வே சுகாதார சேவைத் துறை இயக்குநா் ஜெனரல் மருத்துவா் மன்சிங் திறந்து வைத்தாா்.

சென்னை பெரம்பூரில் 14 ஏக்கா் பரப்பளவில் 600 படுக்கை வசதிகளுடன் கூடிய புதிய தெற்கு ரயில்வே மருத்துவமனை வளாகம் கட்டப்பட்டுள்ளது. இங்கு, இதய அறுவை சிகிச்சை, எலும்பியல், நரம்பியல் அறுவை சிகிச்சை, கண் மருத்துவம், பொது மற்றும் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை உள்ளிட்ட நிபுணத்துவங்கள் வாய்ந்த 15 அதிநவீன அறுவை சிகிச்சை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், சா்வதேச தரத்துடன் கூடிய 4 தீவிர சிகிச்சை பிரிவு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை ரயில்வே சுகாதார சேவைத் துறை இயக்குநா் ஜெனரல் மருத்துவா் மன்சிங் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

இந்த விழாவில், தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங், ரயில்வே வாரிய முதன்மை செயல் இயக்குநா் எம்.ரவீந்திரன் மற்றும் ரயில்வே அதிகாரிகள் கலந்துகொண்டனா்.