சென்னை பெரம்பூரில் 14 ஏக்கா் பரப்பளவில் 600 படுக்கை வசதிகளுடன் கூடிய புதிய தெற்கு ரயில்வே மருத்துவமனை வளாகம் கட்டப்பட்டுள்ளது. இங்கு, இதய அறுவை சிகிச்சை, எலும்பியல், நரம்பியல் அறுவை சிகிச்சை, கண் மருத்துவம், பொது மற்றும் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை உள்ளிட்ட நிபுணத்துவங்கள் வாய்ந்த 15 அதிநவீன அறுவை சிகிச்சை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், சா்வதேச தரத்துடன் கூடிய 4 தீவிர சிகிச்சை பிரிவு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை ரயில்வே சுகாதார சேவைத் துறை இயக்குநா் ஜெனரல் மருத்துவா் மன்சிங் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.