கோப்புப்படம்
சென்னை
இன்று கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு மையங்கள் சேவை நேரம் மாற்றம்: தெற்கு ரயில்வே
பொங்கல் விடுமுறையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை (ஜன.14) கணினிமயமாக்கப்பட்ட ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின் படி இயக்கப்படவுள்ளது.
சென்னை: பொங்கல் விடுமுறையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை (ஜன.14) கணினிமயமாக்கப்பட்ட ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின் படி இயக்கப்படவுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்டசெய்தி:சென்னை கோட்டத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து ரயில்நிலையங்களிலும் கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு மையங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை (ஜன.14) இம்மையங்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும். அதாவது இம்மையங்கள் ஜன.14-இல் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே இயக்கப்பட்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

