நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

இன்று கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு மையங்கள் சேவை நேரம் மாற்றம்: தெற்கு ரயில்வே

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை (ஜன.14) கணினிமயமாக்கப்பட்ட ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின் படி இயக்கப்படவுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :13 ஜனவரி 2025, 10:03 pm

சென்னை: பொங்கல் விடுமுறையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை (ஜன.14) கணினிமயமாக்கப்பட்ட ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின் படி இயக்கப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்டசெய்தி:சென்னை கோட்டத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து ரயில்நிலையங்களிலும் கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு மையங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை (ஜன.14) இம்மையங்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும். அதாவது இம்மையங்கள் ஜன.14-இல் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே இயக்கப்பட்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.