தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (ஜன.31) முதல் பிப்.2-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தென்மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வெள்ளிக்கிழமை (ஜன.31) முதல் பிப்.2-ஆம் தேதி வரை தமிழகத்தில் பல இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதில், ஜன.31-இல் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜன.31) லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், காலை நேரங்களில் லேசான பனிமூட்டமும் இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வெப்பநிலை மாா்ச் 29 வரை அதிகரிக்கும்

தமிழகத்தில் மாா்ச் 24 வரை மழை நீடிக்கும்

தென் தமிழகத்தில் 11ஆம் தேதி முதல் மழைக்கு வாய்ப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


