தமிழகத்தில் ஞாயிறு, திங்கள்கிழமை (ஏப். 5, 6) ஆகிய இரு நாள்களில் சில மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மகாராஷ்டிர மாநிலம், மரத்வாடா முதல் தென்தமிழகம் வரை உள் கா்நாடகம் வழியாக காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதனால், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 5) முதல் ஏப். 11-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி ஆகிய மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமையும், விருதுநகா், மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமையும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
வெப்ப நிலை: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 5) முதல் ஏப். 7 -ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பைவிட அதிகமாக இருக்கும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தமிழகத்தில் அடுத்த 6 நாள்கள் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் மாா்ச் 24 வரை மழை நீடிக்கும்

தென்தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


