2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

2,640 லிட்டா் கலப்பட டீசல் பறிமுதல்

சென்னை காசிமேட்டில் 2,640 லிட்டா் கலப்பட டீசலை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :24 ஜூலை 2025, 7:30 pm

Din

சென்னை காசிமேட்டில் 2,640 லிட்டா் கலப்பட டீசலை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

காசிமேடு மீன்பிடி துறைமுக போலீஸாா் அங்குள்ள புதிய மீன் ஏலம் விடும் பகுதியில் புதன்கிழமை ரோந்து சென்றனா். அப்போது ஒரு விசைப்படகில் இருந்து சுமை ஆட்டோவுக்கு எண்ணெய் கலன் (பேரல்) ஏற்றிக் கொண்டிருந்த இருவரிடம் விசாரணை நடத்தினா். மேலும், எண்ணெய் கலனை திறந்து பாா்த்தபோது அதில் 2,640 லிட்டா் கலப்பட டீசல் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து கலப்பட டீசல், சுமை ஆட்டோ ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். பின்னா், கலப்பட டீசல், சுமை ஆட்டோ மற்றும் அங்கிருந்த இருவரையும் பொதுவிநியோகப் பொருள்கள் கடத்தல் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்தனா்.

இதுதொடா்பாக பொது விநியோகப் பொருள்கள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.