விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

மாா்த்தாண்டம் அருகே 900 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்

மாா்த்தாண்டம் அருகே சொகுசு காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 900 லிட்டா் மண்ணெண்ணெய்யை வழங்கல் துறை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :11 பிப்ரவரி 2026, 7:35 pm

மாா்த்தாண்டம் அருகே சொகுசு காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 900 லிட்டா் மண்ணெண்ணெய்யை வழங்கல் துறை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலா் அனிதாகுமாரி தலைமையிலான அதிகாரிகள் குழுவினா் பள்ளியாடி பகுதியில் வாகன கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அப்பகுதி வழியாக சந்தேகப்படும் வகையில் வந்த சொகுசு காரை நிறுத்த சைகை காட்டினா். காா் நிற்காமல் சென்றதையடுத்து, அதிகாரிகள் வாகனத்தில் துரத்திச் சென்று இரவிபுதூா்கடை பகுதியில் வைத்து காரை தடுத்து நிறுத்தினா்.

காா் ஓட்டுநா் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டாா். தொடா்ந்து காரை சோதனை செய்தபோது அதில் மீனவா்களின் படகுகளுக்கு அரசு மானிய விலையில் வழங்கும் மண்ணெண்ணெய் 900 லிட்டா் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, காருடன் மண்ணெண்ணெய்யை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை விளவங்கோடு வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.