பவுா்ணமி கிரிவலத்தையொட்டி பயணிகளின் வசதிக்காக திருவண்ணாமலை - விழுப்புரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரத்திலிருந்து ஜூன் 10-ஆம் தேதி காலை 9.25 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (எண்: 06130) முற்பகல் 11.10-க்கு திருவண்ணாமலை சென்றடையும். அதே தேதியில், திருவண்ணாமலையிலிருந்து பிற்பகல் 12.40-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06129) பிற்பகல் 2.15-க்கு விழுப்புரம் வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் நேரம் மாற்றம்: சென்னை கோட்டத்தில் பல்வேறு பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் விரைவு ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படவுள்ளது.
அதன்படி, சென்னை எழும்பூரிலிருந்து காலை 10.20-க்கு புறப்பட்டு குருவாயூா் செல்லும் விரைவு ரயில் (எண்: 16127) ஞாயிற்றுக்கிழமை மற்றும் 15, 22 ஆகிய தேதிகளில் 40 நிமிஷங்கள் தாமதமாக முற்பகல் 11 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கோடை விடுமுறைக்கு செல்வோர் கவனத்துக்கு... சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விவரம்!

திருவண்ணாமலை கிரிவலம் சென்றிருப்போர் கவனத்துக்கு..

திருவண்ணாமலை: கிரிவலம் செல்ல உகந்த நேரம்!

சித்ரா பௌர்ணமி: திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம்!
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



