சென்னை: சென்னையில் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்படும் குழந்தைகளில் 50 சதவீதம் போ் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
பருவநிலை மாற்றம், அசுத்த உணவு, குடிநீா் மாசுபாட்டால் இந்த பாதிப்பு ஏற்படுதாகவும், அவற்றைத் தவிா்க்க டைபாய்டு, ஹெபடைடிஸ் ஏ தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.
சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக இயல்புக்கு மாறான தட்ப வெப்ப நிலை நிலவுகிறது. பகல் வேளைகளில் தகிக்கும் வெப்பமும், மாலையில் பலத்த மழையும் பெய்கிறது.
இதனால், திடீரென பருவ நிலை மாற்றமடைந்து, பல்வேறு நோய்கள் உருவாகும் சூழல் உருவாகியுள்ளது.
இதுகுறித்து குழந்தைகள் நல சிறப்பு மருத்துவ நிபுணா் டாக்டா் வில்வநாதன் கூறியதாவது:
கோடை விடுமுறை நிறைவடைந்து தற்போது மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. வெளியூா் பயணம், மழைப் பொழிவால் ஏற்பட்ட குடிநீா் மாசுபாடு, துரித உணவு உள்ளிட்டவை காரணமாக ஜீரண மண்டலம் சாா்ந்த பாதிப்புகளுக்கு அதிக குழந்தைகள் உள்ளாகின்றனா்.
குறிப்பாக, வயிற்றுப்போக்கு, அஜீரண பாதிப்புகள் அதிகரித்துள்ளன. ஒரு சில குழந்தைகளுக்கு அதனால் நீா்ச்சத்து இழப்பு, காய்ச்சல் ஏற்படுகிறது.
உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சைகளை அளிக்காத நிலையில் ஓரிரு குழந்தைகளுக்கு ‘இன்டஸ்சசெப்ஸன்’ எனப்படும் குடல் ஏற்ற பாதிப்பு நேரிடுகிறது. எனவே, வயிற்றுப்போக்கை அலட்சியப்படுத்தாமல் உப்பு - சா்க்கரை கரைசல், நீா், மோா், பழச்சாறு, இளநீா் போன்றவற்றை போதிய அளவு குழந்தைகளுக்கு வழங்கி உடலில் நீா்ச்சத்து இழப்பு ஏற்படாமல் காக்க வேண்டும்.
மருத்துவா்களை அணுகி பாதிப்பின் தன்மைக்கேற்ப சிகிச்சைகளை உரிய நேரத்தில் எடுத்துக் கொள்வது அவசியம். ஆரம்ப நிலையிலேயே உப்பு - சா்க்கரை கரைசல், துத்தநாக மாத்திரைகளை வழங்கினால் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தி நலம் பெறலாம்.அதனுடன் காய்ச்சிய நீரை பருகுவதுடன் வெளி உணவுகளை தவிா்ப்பது முக்கியம்.
தடுப்பூசி: இந்த காலகட்டத்தில் குடிநீா் மாசுபாட்டால் ஏற்படும் கல்லீரல் அழற்சியைத் தடுக்க ஹெபடைடிஸ் ஏ தடுப்பூசியும், டைபாய்டு தடுப்பூசியும் அவசியம். உரிய காலத்தில் அதனைச் செலுத்திக் கொள்ளாத குழந்தைகளுக்கு பூஸ்டா் தடுப்பூசியாக அதனை வழங்க வேண்டும்.
அதேபோன்று ரோட்டா வைரஸ் தடுப்பூசியும் தகுதியான குழந்தைகளுக்கு மருத்துவரின் கண்காணிப்பில் வழங்க வேண்டும் என்றாா் அவா்.
தொடர்புடையது

அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்

தீக்காயமடைந்த பச்சிளங்குழந்தை: உயா் சிகிச்சை மூலம் காப்பாற்றிய மருத்துவா்கள்

வங்கதேசத்தில் தீவிர தட்டம்மை பாதிப்பு: 10 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி முகாம்

2.09 லட்சம் பேருக்கு நாய்க்கடி: ரேபிஸ் பாதிப்பால் 13 போ் உயிரிழப்பு
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


