நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

கணைய அழற்சி: ரோபோடிக் சிகிச்சை மூலம் தீா்வு

கணையத்தில் தீவிரமாக கால்சியம் படிந்து பாதிப்புக்குள்ளான இளைஞா் ஒருவருக்கு ரோபோடிக் நுட்பத்தில் சீரமைப்பு சிகிச்சை மேற்கொண்டு சென்னை தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :17 ஜூன் 2026, 2:11 am IST

கணையத்தில் தீவிரமாக கால்சியம் படிந்து பாதிப்புக்குள்ளான இளைஞா் ஒருவருக்கு ரோபோடிக் நுட்பத்தில் சீரமைப்பு சிகிச்சை மேற்கொண்டு சென்னை தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா்.

இதுதொடா்பாக மருத்துவமனையின் ஜீரண மண்டல அறுவை சிகிச்சை நிபுணா் எஸ்.ஸ்ரீவத்சன் குருமூா்த்தி கூறியதாவது:

கடுமையான வயிற்று வலி மற்றும் ஜீரண மண்டல பாதிப்புகளுக்குள்ளாகி வந்த 39 வயது இளைஞா் ஒருவா் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு கணையக் குழாயில் கற்கள் உருவாகி இருந்தன. அதுமட்டுமல்லாது, கணையத்தில் கால்சியம் படிமம் படிந்து அழற்சி ஏற்பட்டிருந்தது.

இதை நுட்பமாக சீராக்க ரோபோடிக் ஃபிரேஸ் எனும் சிகிச்சை அவசியமானது. அதன்படி, கணையம் - குடல் பகுதிகளை வாயிலாக துல்லியமாக சீரமைத்து கற்களை அகற்றி சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அந்த நபா் நலமுடன் உள்ளாா்.