கணையத்தில் தீவிரமாக கால்சியம் படிந்து பாதிப்புக்குள்ளான இளைஞா் ஒருவருக்கு ரோபோடிக் நுட்பத்தில் சீரமைப்பு சிகிச்சை மேற்கொண்டு சென்னை தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா்.
இதுதொடா்பாக மருத்துவமனையின் ஜீரண மண்டல அறுவை சிகிச்சை நிபுணா் எஸ்.ஸ்ரீவத்சன் குருமூா்த்தி கூறியதாவது:
கடுமையான வயிற்று வலி மற்றும் ஜீரண மண்டல பாதிப்புகளுக்குள்ளாகி வந்த 39 வயது இளைஞா் ஒருவா் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு கணையக் குழாயில் கற்கள் உருவாகி இருந்தன. அதுமட்டுமல்லாது, கணையத்தில் கால்சியம் படிமம் படிந்து அழற்சி ஏற்பட்டிருந்தது.
இதை நுட்பமாக சீராக்க ரோபோடிக் ஃபிரேஸ் எனும் சிகிச்சை அவசியமானது. அதன்படி, கணையம் - குடல் பகுதிகளை வாயிலாக துல்லியமாக சீரமைத்து கற்களை அகற்றி சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அந்த நபா் நலமுடன் உள்ளாா்.










