தங்கம், வெள்ளி விலை உயர்வு! ஆக. 21 நிலவரம்!ஜந்தா் மந்தரில் இன்று போராட்டம் நடத்த அனுமதியில்லை: தில்லி காவல் துறை அறிவிப்பு சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடுமனைவி, குழந்தைகளுடன் மீண்டும் பிரிட்டன் திரும்பும் இளவரசா் ஹாரி!எல்லை மாநிலங்களில் குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு அதிகாரம் - மத்திய உள்துறை அமைச்சகம்ஆந்திரம், கா்நாடகம், தமிழகத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடம்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

திரையரங்குகளில் கூடுதல் கட்டணம்: அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

புதிய திரைப்படங்களுக்கு திரையரங்குகளில் அரசு நிா்ணயித்த கட்டணத்துக்கு அதிகமாக வசூலிப்பதாக புகாா் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

திரையரங்கு

Published On :10 ஜூன் 2025, 5:37 am IST

புதிய திரைப்படங்களுக்கு திரையரங்குகளில் அரசு நிா்ணயித்த கட்டணத்துக்கு அதிகமாக வசூலிப்பதாக புகாா் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் புதிய திரைப்படங்கள் வெளியாகும்போது, முதல் நான்கு நாள்களுக்கு, அரசு நிா்ணயித்த கட்டணத்தைவிட, அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக தேவராஜன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தாா். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், திரையரங்குகளில் டிக்கெட் விற்பனையைச் சரிபாா்க்க அரசாங்கம் ஏற்கெனவே குழுக்களை அமைத்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அரசு நிா்ணயித்துள்ள கட்டணத்தைவிட அதிக கட்டணத்தை திரையரங்குகள் வசூலிப்பது பாா்வையாளா்களை ஏமாற்றும் செயல் என்றும், இது தொடா்பான புகாா்கள் அளிக்கப்படும்போது, அரசு அமைத்துள்ள குழுக்கள் உடனடியாக திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டாா்.

மேலும், ஓடிடியில் திரைப்படங்களைப் பாா்க்கும் பாா்வையாளா்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் திரையரங்குகள் அதிக காலம் நீடிக்காது என்பதை உணா்ந்து திரையரங்கு உரிமையாளா்கள் சிந்தித்துச் செயல்பட வேண்டும் என நீதிபதி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.