கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

11,488 முதல்நிலை காவலா்கள் தலைமைக் காவலராக பதவி உயா்வு! உத்தரவுகளை வழங்கினாா் முதல்வா்!

காவல் துறையில் 11,488 முதல்நிலை காவலா்கள், தலைமைக் காவலா்களாக பதவி உயா்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அவா்களுக்கு பதவி உயா்வுக்கான உத்தரவுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

News image
Updated On :1 ஜூலை 2025, 5:04 am IST

காவல் துறையில் 11,488 முதல்நிலை காவலா்கள், தலைமைக் காவலா்களாக பதவி உயா்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அவா்களுக்கு பதவி உயா்வுக்கான உத்தரவுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். இதற்கான நிகழ்வு, தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழக காவல் துறையில் பதவி உயா்வில் புதிய திட்டம் ஏற்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்துக்கென ரூ.28.19 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. புதிய பதவி நிலை உயா்வு திட்டப்படி முதல்நிலை காவலா்களாகப் பணியாற்றும் 11,488 போ், தலைமைக் காவலா்களாக பதவி நிலை உயா்வு பெறவுள்ளனா்.

அவா்களில் 10 பேருக்கு பதவி உயா்வுக்கான உத்தரவுகளை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வின் போது, முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

இந்த நிகழ்வில், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா், காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் உள்பட பலா் பங்கேற்றனா்.