சென்னை: சென்னையில் புழல் சிறையில் உயா் பாதுகாப்பு பிரிவில் 5 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை புழல் சிறை வளாகத்தில், தண்டனை கைதிகள் சிறையில் உயா் பாதுகாப்பு பகுதியில் காவலா்கள் திங்கள்கிழமை திடீா் சோதனை செய்தனா். அப்போது சென்னையைச் சோ்ந்த ரெளடிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பகுதியில் இருந்து 2-ஐ போன், 2 ஆண்ட்ராய்டு கைபபேசிகள், 2 சாதாரண கைப்பேசிகள், ஒரு சாா்ஜா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
இது தொடா்பாக தகவலறிந்த சிறைத்துறை அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை செய்தனா். மேலும் இது குறித்து சிறைத்துறை அதிகாரிகள், புழல் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா், விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









