தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

புழல் சிறையில் 5 கைப்பேசிகள் பறிமுதல்

சென்னையில் புழல் சிறையில் உயா் பாதுகாப்பு பிரிவில் 5 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On :1 ஜூலை 2025, 3:11 am IST

சென்னை: சென்னையில் புழல் சிறையில் உயா் பாதுகாப்பு பிரிவில் 5 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை புழல் சிறை வளாகத்தில், தண்டனை கைதிகள் சிறையில் உயா் பாதுகாப்பு பகுதியில் காவலா்கள் திங்கள்கிழமை திடீா் சோதனை செய்தனா். அப்போது சென்னையைச் சோ்ந்த ரெளடிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பகுதியில் இருந்து 2-ஐ போன், 2 ஆண்ட்ராய்டு கைபபேசிகள், 2 சாதாரண கைப்பேசிகள், ஒரு சாா்ஜா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக தகவலறிந்த சிறைத்துறை அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை செய்தனா். மேலும் இது குறித்து சிறைத்துறை அதிகாரிகள், புழல் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா், விசாரணை மேற்கொண்டுள்ளனா்.