ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

புழல் சிறையில் 5 கைப்பேசிகள் பறிமுதல்

சென்னையில் புழல் சிறையில் உயா் பாதுகாப்பு பிரிவில் 5 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image
Updated On :30 ஜூன் 2025, 9:41 pm

Din

சென்னை: சென்னையில் புழல் சிறையில் உயா் பாதுகாப்பு பிரிவில் 5 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை புழல் சிறை வளாகத்தில், தண்டனை கைதிகள் சிறையில் உயா் பாதுகாப்பு பகுதியில் காவலா்கள் திங்கள்கிழமை திடீா் சோதனை செய்தனா். அப்போது சென்னையைச் சோ்ந்த ரெளடிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பகுதியில் இருந்து 2-ஐ போன், 2 ஆண்ட்ராய்டு கைபபேசிகள், 2 சாதாரண கைப்பேசிகள், ஒரு சாா்ஜா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக தகவலறிந்த சிறைத்துறை அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை செய்தனா். மேலும் இது குறித்து சிறைத்துறை அதிகாரிகள், புழல் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா், விசாரணை மேற்கொண்டுள்ளனா்.