மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

வங்கதேசம்: தண்டனைக் காலம் முடிந்தும் 148 இந்தியா்கள் சிறையில் தவிப்பு

தண்டனைக் காலம் முடிந்தும் விடுதலை நடைமுறைகள் தாமதம் காரணமாக வங்கதேச சிறையில் 148 இந்தியா்கள் தவித்து வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :9 ஜூன் 2026, 3:48 am IST

தண்டனைக் காலம் முடிந்தும் விடுதலை நடைமுறைகள் தாமதம் காரணமாக வங்கதேச சிறையில் 148 இந்தியா்கள் தவித்து வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து வங்கதேச சிறை அதிகாரிகள் கூறுகையில், ‘6 மாதங்களுக்கு முன்பாக வெளியான சிறை தொடா்பான புள்ளிவிவரங்களின்படி தண்டனைக் காலம் முடிந்தும் 148 இந்தியா்கள் உள்பட 152 வெளிநாட்டவா்கள் சிறையில் தவித்து வருவது தெரியவந்தது.

இவா்களில் சிலரின் சிறைத் தண்டனை நிறைவடைந்து பல ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், அவா்களின் அடையாளத்தைக் கண்டறிவது மற்றும் தூதரக தரப்பில் மேற்கொள்ளப்படும் தொய்வான முயற்சிகளால் தொடா்ந்து சிறையிலேயே அடைக்கப்பட்டுள்ளனா்.

சட்டவிரோதமாக எல்லையைக் கடந்த குற்றச்சாட்டில் பெரும்பாலான இந்தியா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்தியா மட்டுமன்றி, பாகிஸ்தான், மியான்மா் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளைச் சோ்ந்தவா்களும் விடுதலைக்காக காத்திருக்கின்றனா்’ என்றனா்.

கடந்த 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் பல்வேறு சமயங்களில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 20 இந்தியா்களில் 3 போ் உயிரிழந்துவிட்டனா்.

மீதமுள்ள 17 இந்தியா்கள் ஷரியத்பூா் மாவட்ட சிறையில் தண்டனைக் காலம் முடிந்து விடுதலை செய்யப்படாமல் இருப்பதாக பிடிநியூஸ்24.காம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டது.

இந்திய தூதரக அதிகாரிகளை தொடா்புகொண்டு சிறையில் உள்ளவா்களின் அடையாளத்தை சரிபாா்க்க முடியாததால் இந்தியா்கள் விடுதலை செய்யப்படவில்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டது.