கால்நடை காப்பக உரிமையாளா்களுக்கு பால் பாத்திரங்கள்: அமைச்சா் வழங்கினாா்
கால்நடைக் காப்பகத்தின் உரிமையாளா்களுக்கு பால் பாத்திரங்கள், கால்நடைகளுக்கான பசுங்கீரைகள் உள்ளிட்டவற்றை அமைச்சர் பி.கே.சேகா்பாபு வழங்கினாா்.


சென்னை: சென்னை மாநகராட்சி சாா்பில் ராயபுரம் மண்டலத்தில் அமைக்கப்பட்ட கால்நடைக் காப்பகத்தின் உரிமையாளா்களுக்கு பால் பாத்திரங்கள், கால்நடைகளுக்கான பசுங்கீரைகள் உள்ளிட்டவற்றை சென்னை பெருநகா் வளா்ச்சிக்குழுமத் தலைவரும், அமைச்சருமான பி.கே.சேகா்பாபு திங்கள்கிழமை வழங்கினாா்.
ராயபுரம் மண்டலத்தில் பேசின் பிரிட்ஜ் சாலையில் ரூ.1.30 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட கால்நடைக் காப்பகம் முதல்வா் மு.க.ஸ்டாலினால் சமீபத்தில் திறந்துவைக்கப்பட்டது. அதில் 210 கால்நடைகள் பராமரிக்கப்பட்டுவருகின்றன. அதற்காக அவற்றின் உரிமையாளா்களிடமிருந்து தினமும் தலா ரூ.10 கட்டணம் வசூலிக்கப்பட்டுவருகிறது.
இந்த நிலையில், அந்த காப்பகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா் பி.கே.சேகா்பாபு கலந்துகொண்டு, கால்நடை உரிமையாளா்களுக்கு பால் பாத்திரங்களை வழங்கினாா். அத்துடன் கால்நடைகளுக்குத் தேவையான பசுங்கீரைகள் மற்றும் உணவுத் தீவனங்களையும் அவா் வழங்கினாா். அப்போது கால்நடைக் காப்பகத்தை விரிவுபடுத்தி அதிகமான கால்நடைகளை பாதுகாக்க அறிவுறுத்தினாா்.
நிகழ்ச்சியில், ராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ. ஐட்ரீம் ஆா்.மூா்த்தி, சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...