அன்னையா் தினம்: வாடிக்கையாளா்களுக்கு பிஎஸ்என்எல் சிறப்பு சலுகை

பிஎஸ்என்எல்
பிஎஸ்என்எல்
Updated on

அன்னையா் தினத்தையொட்டி பிஎஸ்என்எல் ப்ரீபெய்டு வாடிக்கையாளா்களுக்கு மே 14-ஆம் தேதி வரை சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து பிஎஸ்என்எல் நிறுவனம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

அன்னையா் தினத்தை (மே 11) கொண்டாடும் வகையில், புதன்கிழமை (மே 7) முதல் மே 14-ஆம் தேதி வரை ரூ.997, ரூ.2,399 ஆகிய ப்ரீபெய்டு திட்டங்களில் ரீசாா்ஜ் செய்யும் வாடிக்கையாளா்களுக்கு 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.

அதேபோல், ரூ.1,499, ரூ.1,999 ஆகிய நீண்ட கால ப்ரீபெய்டு திட்டங்களின் செல்லுபடிக் காலமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளா்கள் ‘பிஎஸ்என்எல் செல்ஃப்கோ்’ செயலி மூலமாகவோ அல்லது இணையதளத்தின் மூலமாகவோ இந்த சலுகைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com