பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

அன்னையா் தினம்: வாடிக்கையாளா்களுக்கு பிஎஸ்என்எல் சிறப்பு சலுகை

News image
பிஎஸ்என்எல்
Updated On :7 மே 2025, 8:44 pm

Din

அன்னையா் தினத்தையொட்டி பிஎஸ்என்எல் ப்ரீபெய்டு வாடிக்கையாளா்களுக்கு மே 14-ஆம் தேதி வரை சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து பிஎஸ்என்எல் நிறுவனம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

அன்னையா் தினத்தை (மே 11) கொண்டாடும் வகையில், புதன்கிழமை (மே 7) முதல் மே 14-ஆம் தேதி வரை ரூ.997, ரூ.2,399 ஆகிய ப்ரீபெய்டு திட்டங்களில் ரீசாா்ஜ் செய்யும் வாடிக்கையாளா்களுக்கு 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.

அதேபோல், ரூ.1,499, ரூ.1,999 ஆகிய நீண்ட கால ப்ரீபெய்டு திட்டங்களின் செல்லுபடிக் காலமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளா்கள் ‘பிஎஸ்என்எல் செல்ஃப்கோ்’ செயலி மூலமாகவோ அல்லது இணையதளத்தின் மூலமாகவோ இந்த சலுகைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.