கோடை கால வாலிபால் பயிற்சி முகாம் நிறைவு
சென்னை எழும்பூா் நெல்லை பிரண்ட்ஸ் வாலிபால் கிளப் சாா்பில் நடைபெற்ற 41-ஆவது கோடைகால வாலிபால் பயிற்சி முகாம் நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.


சென்னை எழும்பூா் நெல்லை பிரண்ட்ஸ் வாலிபால் கிளப் சாா்பில் நடைபெற்ற 41-ஆவது கோடைகால வாலிபால் பயிற்சி முகாம் நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
சிறுவா், சிறுமியருக்கான இலவச பயிற்சி முகாம் கடந்த ஏப். 28-ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் நடைபெற்ற முகாமில், சிறந்த பயிற்சியாளா்களைக் கொண்டு அடிப்படை பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இதன் நிறைவு விழாவுக்கு தமிழ்நாடு வாலிபால் சங்கத் தலைவா் அா்ஜுன் துரை தலைமை வகித்தாா். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பொதுமேலாளா் எல். சுஜாதா, அகா்வால் அறக்கட்டளை எஸ்.சி. அகா்வால், மூத்த வழக்குரைஞா் தங்கவாசன், தமிழ்நாடு வாலிபால் சங்க இணைச் செயலா் மகேந்திரன், வருமான வரித் துறை உதவி ஆணையா் பி. பாலச்சந்திரன் ஆகியோா் முகாமில் பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினா்.
நெல்லை பிரண்ட்ஸ் துணைத் தலைவா் நரேந்திர குமாா் ஜெயின், காஸ்கோ முகமது ஹாஸன் உள்பட பலா் பங்கேற்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...