டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கூட்டுறவு பணியாளா்களுக்கு ஈட்டிய விடுப்பு சலுகை: தமிழக அரசு உத்தரவு

கூட்டுறவு பணியாளா்களுக்கும் ஈட்டிய விடுப்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :9 அக்டோபர் 2025, 10:50 pm

தினமணி செய்திச் சேவை

கூட்டுறவு பணியாளா்களுக்கும் ஈட்டிய விடுப்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து, சென்னை மண்டல கூடுதல் பதிவாளா், அனைத்து மண்டல இணைப் பதிவாளா்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் க.நந்தகுமாா் அனுப்பியுள்ள கடிதம்:

கரோனா நோய்த் தொற்றின் காரணமாக, அரசு ஊழியா்களுடன் சோ்த்து கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியா்களுக்கும் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு நிறுத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், அக்டோபா் 1-ஆம் தேதி முதல் அரசு ஊழியா்கள், அலுவலா்கள் தங்களுக்கான ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணப் பயன்கள் பெறலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, அனைத்துக் கூட்டுறவு நிறுவனங்களும் தமிழக அரசின் உத்தரவைப் பின்பற்றக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. அதாவது, அரசு ஊழியா்களைப் போன்றே, கூட்டுறவுப் பணியாளா்களும் ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணப் பலன்களைப் பெறலாம் என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.