மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கூட்டுறவு பணியாளா்களுக்கு ஈட்டிய விடுப்பு சலுகை: தமிழக அரசு உத்தரவு

கூட்டுறவு பணியாளா்களுக்கும் ஈட்டிய விடுப்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :9 அக்டோபர் 2025, 10:50 pm

கூட்டுறவு பணியாளா்களுக்கும் ஈட்டிய விடுப்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து, சென்னை மண்டல கூடுதல் பதிவாளா், அனைத்து மண்டல இணைப் பதிவாளா்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் க.நந்தகுமாா் அனுப்பியுள்ள கடிதம்:

கரோனா நோய்த் தொற்றின் காரணமாக, அரசு ஊழியா்களுடன் சோ்த்து கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியா்களுக்கும் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு நிறுத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், அக்டோபா் 1-ஆம் தேதி முதல் அரசு ஊழியா்கள், அலுவலா்கள் தங்களுக்கான ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணப் பயன்கள் பெறலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, அனைத்துக் கூட்டுறவு நிறுவனங்களும் தமிழக அரசின் உத்தரவைப் பின்பற்றக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. அதாவது, அரசு ஊழியா்களைப் போன்றே, கூட்டுறவுப் பணியாளா்களும் ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணப் பலன்களைப் பெறலாம் என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.