சென்னை: தீபாவளியின்போது, பட்டாசு வெடிப்பால் வளசரவாக்கத்தில் அதிக அளவில் காற்று மாசடைந்ததாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மாசுக் கட்டுப்பாட்டு குழுமங்கள் மேற்கொள்ளக்கூடிய முக்கிய நகரங்களில் குறுகிய கால கண்காணிப்பாக 15 நாள்களுக்கு (அதாவது தீபாவளிக்கு 7 நாள்களுக்கு முன்பாகவும், தீபாவளி நாள், தீபாவளிக்கு 7 நாள்களுக்கு பின்பாகவும்) முக்கிய காற்று மாசு காரணிகளின் அளவுகளைக் கண்காணிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, தமிழக அரசு மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உத்தரவின்படி, கடந்த ஆண்டைப் போலவே பசுமைப் பட்டாசுகளை வெடிக்கும் நேரத்தை கடந்த திங்கள்கிழமை (அக். 20) காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் அறிவுறுத்தப்பட்டது.
தீபாவளியின்போது, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் சுற்றுப்புற காற்றின் மாசு தர அளவையும் மற்றும் ஒலி மாசு அளவையும் கண்டறிய கண்காணிக்கப்பட்டது.
சென்னை மாநகராட்சியில் காற்றுத் தர குறியீட்டு அளவு குறைந்தபட்சமாக பெசன்ட் நகா் 190, அதிகபட்சமாக வளசரவாக்கத்தில் 332 வரை இருந்தது ஆய்வில் கண்டறியப்பட்டது.
ஒலி தரக் குறியீட்டு அளவு குறைந்தபட்சமாக பெசன்ட் நகரிலும், அதிகப்பட்சமாக திருவொற்றியூரிலும் கண்டறியப்பட்டன.
தொடர்புடையது
தில்லி காற்று மாசைத் தடுக்கலாம்!

காற்று மாசு - நுரையீரல் புற்றுநோய் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளும் தில்லி எய்ம்ஸ்!

விமான நிலையத்தில் இளம்பெண்ணிடம் அத்துமீறல்: மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி கைது

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரு அமைப்புகளுக்கு பசுமை சாதனையாளா் விருது
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

