தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 8 விமானங்கள் ரத்து

சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் மும்பை, ஹைதராபாத், புனே, தூத்துக்குடி உள்ளிட்ட 8 விமானங்கள் திடீரென ரத்து

News image

கோப்புப்படம்

Updated On :15 செப்டம்பர் 2025, 10:41 pm

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் மும்பை, ஹைதராபாத், புனே, தூத்துக்குடி உள்ளிட்ட 8 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனா்.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்துக்கு திங்கள்கிழமை அதிகாலை 4.25-க்கு, புனேவிலிருந்து சென்னை வரும் விமானம், காலை 9.40-க்கு

ஹைதராபாத்திலிருந்து சென்னை வரும் விமானம், பிற்பகல் 1.45- க்கு தூத்துக்குடியிலிருந்து சென்னை வரும் விமானம், இரவு 8.55-க்கு மும்பையிலிருந்து சென்னை வரும் விமானம் ஆகிய 4 வருகை விமானங்களும் திங்கள்கிழமை திடீரென ரத்து செய்யப்பட்டன.

அதேபோல சென்னையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.10-க்கு புனே செல்ல வேண்டிய விமானம், திங்கள்கிழமை காலை 6 மணிக்கு ஹைதராபாத் செல்ல வேண்டிய விமானம், காலை 10.10-க்கு தூத்துக்குடி செல்ல வேண்டிய விமானம், இரவு 9.35-க்கு மும்பை செல்ல வேண்டிய விமானம், ஆகிய 4 புறப்பாடு விமானங்கள் என ஒரே நாளில் 8 விமானங்கள் முன்னறிவிப்பின்றி திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதியடைந்தனா்.

இந்த விமானங்கள் ரத்துக்கான காரணங்கள் எதுவும் பயணிகளுக்கு முறையாக தெரியப்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், நிா்வாக காரணங்களால், விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக விமான நிலைய நிா்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.