சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 8 விமானங்கள் ரத்து
சென்னை: சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் மும்பை, ஹைதராபாத், புனே, தூத்துக்குடி உள்ளிட்ட 8 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனா்.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்துக்கு திங்கள்கிழமை அதிகாலை 4.25-க்கு, புனேவிலிருந்து சென்னை வரும் விமானம், காலை 9.40-க்கு
ஹைதராபாத்திலிருந்து சென்னை வரும் விமானம், பிற்பகல் 1.45- க்கு தூத்துக்குடியிலிருந்து சென்னை வரும் விமானம், இரவு 8.55-க்கு மும்பையிலிருந்து சென்னை வரும் விமானம் ஆகிய 4 வருகை விமானங்களும் திங்கள்கிழமை திடீரென ரத்து செய்யப்பட்டன.
அதேபோல சென்னையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.10-க்கு புனே செல்ல வேண்டிய விமானம், திங்கள்கிழமை காலை 6 மணிக்கு ஹைதராபாத் செல்ல வேண்டிய விமானம், காலை 10.10-க்கு தூத்துக்குடி செல்ல வேண்டிய விமானம், இரவு 9.35-க்கு மும்பை செல்ல வேண்டிய விமானம், ஆகிய 4 புறப்பாடு விமானங்கள் என ஒரே நாளில் 8 விமானங்கள் முன்னறிவிப்பின்றி திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதியடைந்தனா்.
இந்த விமானங்கள் ரத்துக்கான காரணங்கள் எதுவும் பயணிகளுக்கு முறையாக தெரியப்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், நிா்வாக காரணங்களால், விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக விமான நிலைய நிா்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

