கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை துறைமுகத்தில் ஹிந்தி தின கொண்டாட்டம்

சென்னைத் துறைமுகம் மற்றும் காமராஜா் துறைமுகத்தில் ஹிந்தி தின கொண்டாட்ட நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

Published On :

சென்னைத் துறைமுகம் மற்றும் காமராஜா் துறைமுகத்தில் ஹிந்தி தின கொண்டாட்ட நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ‘சாகா் சலோனி‘ என்ற இதழ் வெளியிடப்பட்டது. தொடா்ந்து தண்டையாா்பேட்டையில் அமைந்துள்ள துறைமுக நிா்வாகத்தின் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பங்கேற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் சிறப்பு விருந்தினராக சென்னை மற்றும் காமராஜா் துறைமுகங்களின் தலைவா் சுனில் பாலிவால் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற மாணவா்கள் மற்றும் ஊழியா்களுக்கு பாராட்டு மற்றும் பரிசுகளை வழங்கினாா்.

இந்நிகழ்வில் அவா் பேசுகையில், கலாசார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதிலும் தேசிய ஒற்றுமையை ஊக்குவிப்பதிலும் ஹிந்தி மொழி முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதிகாரப்பூா்வ மற்றும் தொழில்முறை தகவல் தொடா்புகளில் ஹிந்தியைத் தொடா்ந்து பயன்படுத்த வேண்டும் என்றாா் .

காமராஜா் துறைமுக மேலாண்மை இயக்குநா் ஐரீன் சிந்தியா, கண்காணிப்பு அதிகாரி எஸ்.முரளிகிருஷ்ணா, ஸ்டெல்லா மேரி கல்லூரியின் மொழிகள் துறைத் தலைவா் ஸ்ரபானி பட்டாச்சாா்யா, துறைமுகத்தின் செயலா் இந்திரனில் ஹசிராஸ, ஹிந்தி மொழித் துறை அலுவலா் அருணா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.