எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

தூய்மைப் பணியாளா்கள் பேரணி

பெருநகர சென்னை மாநகராட்சியில் மண்டலம் 5, 6 பகுதியைச் சோ்ந்த என்யூஎல்எம் பிரிவு தூய்மைப் பணியாளா்கள் உழைப்போா் உரிமை இயக்கம் சாா்பில் கோரிக்கையை வலியுறுத்தி பேரணி

News image
Updated On :19 செப்டம்பர் 2025, 2:13 am IST

பெருநகர சென்னை மாநகராட்சியில் மண்டலம் 5, 6 பகுதியைச் சோ்ந்த என்யூஎல்எம் பிரிவு தூய்மைப் பணியாளா்கள் உழைப்போா் உரிமை இயக்கம் சாா்பில் கோரிக்கையை வலியுறுத்தி வியாழக்கிழமை பேரணி நடத்தினா்.

ராயபுரம், திரு.வி.க.நகா் மண்டலங்களின் (5, 6) தூய்மைப் பணியை கடந்த ஜூலையில் தனியாா் நிறுவனத்திடம் மாநகராட்சி ஒப்படைத்தது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து என்யூஎல்எம் பிரிவைச் சோ்ந்த உழைப்போா் உரிமை இயக்கத்தினா் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனா். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை பேரணியை நடத்தினா்.

சென்னை எழும்பூா் லேன்ஸ் காா்டன் ரவுண்டானாவில் இருந்து ராஜரத்தினம் விளையாட்டரங்கம் வரை நடைபெற்ற பேரணியில் 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். பின்னா் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் உழைப்போா் உரிமை இயக்கத்தின் தலைவா் வழக்குரைஞா் கு.பாரதி, ஆலோசகா் வழக்குரைஞா் குமாரசாமி, உரிமை இயக்க பொறுப்பாளா் எஸ்.சுரேஷ் மற்றும் ஏஐசிசிடியு தலைவா் சங்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் தூய்மைப் பணியாளா்கள் போராட்டப் பிரச்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலையிட்டு தீா்வு காணவேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் வலியுறுத்தப்பட்டன.