தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க மாநகராட்சி உத்தரவு

சென்னையில் அண்மையில் பெய்த மழையால் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க ஒப்பந்ததாரா்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :24 செப்டம்பர் 2025, 8:47 pm

தினமணி செய்திச் சேவை

சென்னையில் அண்மையில் பெய்த மழையால் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க ஒப்பந்ததாரா்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி சாலைப் பணி மேற்பாா்வை பொறியாளா்கள் தரப்பில் கூறியதாவது:

சென்னை மாநகராட்சியில் பிரதான சாலைகள் முதல் போக்குவரத்து பயன்பாட்டுக்கான சிறிய சாலைகள் வரை மழையால் சேதமடைந்தவற்றைக் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக மண்டலம் வாரியாக செயற்பொறியாளா்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், முக்கிய சாலைகள் மழையால் சேதமடைந்திருந்தால் அவற்றை ஒரு வாரத்துக்குள் சீரமைக்க சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

உடனடியாக சாலையை சீரமைக்காத ஒப்பந்ததாரா்கள் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளனா்.