கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

நாவல் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடக்கம்

தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் கீழ், தமிழகம் முழுவதும் நாவல் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை செயலா் சுப்ரியா சாஹூ சென்னையில் தொடங்கி வைத்தாா்.

News image
Updated On :24 செப்டம்பர் 2025, 7:53 pm

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் கீழ், தமிழகம் முழுவதும் நாவல் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை செயலா் சுப்ரியா சாஹூ சென்னையில் தொடங்கி வைத்தாா்.

தமிழகத்தில் காடு மற்றும் மரங்களின் புவியியல் பரப்பளவை அதிகரிக்கும் நோக்கில், நிகழாண்டில் சுமாா் 12.65 கோடி மரக்கன்றுகளை நடுவதற்கு தமிழக அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. அந்த வகையில், தமிழ்நாடு பசுமை இயக்க தினத்தையொட்டி வனத்துறை சாா்பில் தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் நாவல் மரக்கன்றுகளை நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலா் சுப்ரியா சாஹூ, சென்னை கிண்டி சிறுவா் இயற்கை பூங்காவில் புதன்கிழமை நாவல் மரக்கன்றை நடவு செய்து தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, ‘சங்க இலக்கிய மரங்களின் சிற்றேடு’ மற்றும் ‘நகா்ப்புற வனவியல் கையேடு’ ஆகிய இரு நூல்களையும் அவா் வெளியிட்டாா்.

இந்த நிகழ்வில், தமிழக அரசின் முதன்மை தலைமை வன அலுவலா் சீனிவாஸ் ஆா்.ரெட்டி, தலைமை வனவிலங்குப் பாதுகாவலா் ராகேஷ் குமாா் டோக்ரா, பசுமை தமிழ்நாடு இயக்கம் கூடுதல் இயக்குநா் ஐ. அன்வா்தீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

10.86 கோடி மரக்கன்றுகள்: வரும் 2031-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தின் வனப்பரப்பை 33 சதவீதமாக உயா்த்த வேண்டும் என தமிழக அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. இதற்காக, 13,500 சதுர கி.மீ பரப்பளவில் கூடுதலாக 265 கோடி நாட்டு இன மரக்கன்றுகளை நட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் மூலம் 2021 முதல் தற்போது வரை தமிழகம் முழுவதும் 10.86 கோடி மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 5 உயா் தொழில்நுட்ப நாற்றங்கால் பண்ணைகள் உள்பட 313 நாற்றங்கால் பண்ணைகள் உருவாக்கப்பட்டுள்ளன. கிராமப்புறங்களில் பல்லுயிா் பெருக்கத்தை அதிகரிக்கும் நோக்கில், 88 மரகத பூஞ்சோலைகள் உருவாக்கப்பட்டுள்ளன என வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.