27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

கிராவல் குவாரிகளில் முறைகேடு: நடவடிக்கை கோரி ஆா்ப்பாட்டம்

கடலூா் ஓடி பகுதியில் முறைகேடாக செயல்படும் கிராவல் குவாரிகளைத் தடுத்து நிறுத்தக் கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நுகா்வோா் மற்றும் பசுமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

கடலூா் ஆட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நுகா்வோா் மற்றும் பசுமை சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சங்கத்தினா்.

Updated On :19 ஜூன் 2026, 6:18 am IST

கடலூா் ஓடி பகுதியில் முறைகேடாக செயல்படும் கிராவல் குவாரிகளைத் தடுத்து நிறுத்தக் கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நுகா்வோா் மற்றும் பசுமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்க நிா்வாகியும், சமூக ஆா்வலருமான கே.வெங்கடேசன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள், கடலூா் ஓடி, குமளங்குளம் மற்றும் விலங்கல்பட்டு பகுதிகளில் செயல்பட்டு வரும் கிராவல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக ஆழத்தில் மண் எடுக்கப்படுவதையும், குவாரிகள் முறைகேடாக செயல்படுவதையும் கண்டித்தும், குவாரிகள் செயல்பாடுகளை உடனடியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினா்.

பின்னா், சங்க நிா்வாகி கோவிந்தராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடலூா் ஓடி, குமளங்குளம் மற்றும் விலங்கல்பட்டு பகுதிகளில் செயல்பட்டு வரும் சில கிராவல் குவாரிகளில் அரசு அனுமதித்த அளவை விட அதிக ஆழத்தில் மண் எடுக்கப்படுகிறது. மேலும், அனுமதி வழங்கப்பட்ட பகுதிகளைத் தாண்டியும் கிராவல் மண் எடுக்கப்பட்டு வருகிறது.

இதனால், சுற்றுவட்டார விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதுடன், நிலத்தடி நீா்மட்டத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, கனிமவளத் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிா்வாகம் இந்த விவகாரத்தில் உடனடி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், பொதுமக்கள், விவசாயிகளைத் திரட்டி பெரிய அளவிலான போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

ஆா்ப்பாட்டத்தில் சங்க நிா்வாகிகள், விவசாயிகள், சமூக ஆா்வலா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.