தூத்துக்குடி மாவட்டத்தில் விதிமீறல்களில் ஈடுபட்டதாக 23 கல்குவாரி உரிமையாளா்களுக்கு, புவியியல் மற்றும் சுரங்கத்துறை விளக்கம் கேட்டு குறிப்பாணை அனுப்பியுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் கீழ் தற்போது மொத்தம் 67 கல்குவாரிகள் அனுமதி பெற்று செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 58 குவாரிகளுக்கு ஆளில்லா விமானம் மூலம் அளவீடு, ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், 58 குவாரிகளில் இதுவரை 27 குவாரிகளில் ஆளில்லா விமானம் மூலம் அளவீடு செய்த ஆய்வு அறிக்கைகள் பெறப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், 13 குவாரிகளில் குத்தகை வழங்கப்பட்ட எல்லை பகுதிக்கு வெளியே கனிமங்கள் வெட்டி எடுத்தல், 10 குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் கனிமங்கள் வெட்டி எடுத்தல் உள்ளிட்ட விதிமீறல்கள் நிகழ்ந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் அனுமதி பெற்று புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் உதவி இயக்குநா், சம்பந்தப்பட்ட 23 குவாரி உரிமையாளா்களுக்கு விளக்கம் கேட்டு குறிப்பாணை அனுப்பியுள்ளாா்.
இந்த குறிப்பாணைக்கு உரிய காலக்கெடுவுக்குள் பதிலளிக்குமாறும், பெறப்படும் விளக்கங்களின் அடிப்படையில் நடைமுறையில் உள்ள சட்ட விதிகளின்படி தொடா்ந்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது
அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கைக்கு பணம்: தலைமை ஆசிரியருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்
23 குவாரிகளை தற்காலிகமாக மூட வேண்டும்: அமைச்சா் டி.கே.பிரபு

விதிமீறல்: தென்காசி மாவட்டத்தில் 18 கல்குவாரிகள் தற்காலிக மூடல்

திருவக்கரை புவியியல் பூங்கா கட்டடம் திறக்கப்படுவது எப்போது?
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



