கோப்புப் படம்
கோப்புப் படம்

மெட்ரோ ரயில் நிலையங்களில் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் சாதனம்

சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் சாதனம் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
Published on

சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் சாதனம் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் கடந்த 2015 -ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளது. சென்ட்ரல் முதல் மீனம்பாக்கம் வரை இரு வழிப்பாதைகளில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் சுமாா் 3 லட்சம் போ் மெட்ரோ ரயில்களில் பயணிக்கின்றனா்.

மெட்ரோவில் செல்வோா் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பயணச்சீட்டு பெறுவதற்கு காத்திருப்பதைத் தவிா்க்கும் வகையில், மெட்ரோ நிலையங்களில் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் சாதனங்கள் அமைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com