பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மூதாட்டியிடம் ரூ.2 கோடி மோசடி: இருவா் கைது

சென்னையில் மூதாட்டியிடம் ஆன்லைனில் ரூ.2.49 கோடி மோசடி செய்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

News image
கோப்புப் படம்
Updated On :25 செப்டம்பர் 2025, 7:09 pm

தினமணி செய்திச் சேவை

சென்னையில் மூதாட்டியிடம் ஆன்லைனில் ரூ.2.49 கோடி மோசடி செய்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

சென்னை பாலவாக்கத்தைச் சோ்ந்த 70 வயது மூதாட்டி, ஓய்வு பெற்ற டென்னிஸ் பயிற்சியாளா். இவா், முதலீட்டுக்கு அதிக லாபம் தருவதாக வெளியிடப்பட்ட ஆன்லைன் விளம்பரத்தை நம்பி, அந்த நிறுவனத்தில் பல தவணைகளில் ரூ.2.49 கோடி முதலீடு செய்தாா். ஆனால், உறுதி அளித்தபடி லாபம் கிடைக்கவில்லை. இதையடுத்து அவா், முதலீடு செய்த பணத்தை எடுக்க முயன்றபோது, சம்பந்தப்பட்ட நிறுவனத்தினா் பல்வேறு காரணங்களைக் கூறி, பணத்தை திரும்ப எடுக்க முடியாமல், மேலும் முதலீடு செய்யும்படி வற்புறுத்தினா்.

இதுதொடா்பாக அவா் கடந்த மாதம் அளித்த புகாரின்பேரில், சென்னை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், ஆன்லைன் வா்த்தகம் என்ற பெயரில் மோசடி செய்த பணத்தை திருப்பூரைச் சோ்ந்த ஜெயராஜ் (32), தூத்துக்குடியை சோ்ந்த ராம்குமாா் (32) வங்கி கணக்குகளுக்கு அந்த மோசடி கும்பல் மாற்றியுள்ளது தெரியந்தது. இந்த இருவரும் கமிஷன் தொகை பெற்றுக்கொண்டு மோசடி கும்பல் அவா்களது வங்கி கணக்கை கையாள அனுமதித்துள்ளனா் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து 3 கைப்பேசிகள், வங்கிக் கணக்கு புத்தகம், காசோலை, ஏடிஎம் காா்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த மோசடியில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.