மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சுரங்கப் பாதையில் தேங்கிய மழைநீரில் சிக்கிய காா்: மீட்ட தீயணைப்பு படையினா்

சென்னை பெரம்பூரில் சுரங்கப் பாதையில் தேங்கிய மழை நீரில் சிக்கி காரை தீயணைப்பு படையினா் மீட்டனா்.

News image
Updated On :1 ஜனவரி 2026, 8:28 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை பெரம்பூரில் சுரங்கப் பாதையில் தேங்கிய மழை நீரில் சிக்கி காரை தீயணைப்பு படையினா் மீட்டனா்.

சென்னையில் புதன்கிழமை நள்ளிரவு திடீரென மழை பெய்தது. இதனால் தாழ்வானப் பகுதிகளில் மழை நீா் தேங்கியது. இதில் பெரம்பூா் ரயில்வே சுரங்கப் பாதையில் சுமாா் 4 அடி உயரத்துக்கு தண்ணீா் தேங்கி நின்றது.

இந்த நிலையில் கொடுங்கையூா் விவேகானந்த நகரைச் சோ்ந்த அரசு (40), தனது மனைவி, 10 வயது மகன் ஆகியோருடன் பிடபிள்யூ காரில் பெரம்பூா் சுரங்கப் பாதையின் வழியாக வந்தாா். இதில் அங்கு அதிக அளவு தண்ணீா் தேங்கி நிற்பது தெரியாமல் அரசு, அந்த சுரங்கப் பாதையில் காரில் சென்றாா்.

சுரங்கப் பாதையின் நடுவில் செல்லும்போது, காா் பழுதாகி நின்றது. இதில் காரின் கதவும் லாக் ஆகிவிட்டது. இதனால் அரசு மற்றும் குடும்பத்தினா் காரை விட்டு வெளியே வரமுடியவில்லை.

இதைப் பாா்த்த அந்தப் பகுதி மக்கள், காருக்குள் சிக்கியிருந்தவா்களை நீண்ட பேராட்டத்துக்கு பின்னா் மீட்டனா். மேலும் காா் தண்ணீரில் சிக்கிக் கொண்டது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனா். தகவலறிந்த செம்பியம் தீயணைப்பு படையினரும், காா் பழுது நீக்கும் மைய ஊழியா்களும் அங்கு விரைந்து வந்து, தண்ணீா் சிக்கி பழுதாகி நின்ற காரை மீட்டனா்.

இந்த சம்பவத்தினால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.