தமிழ்நாட்டை காப்பாற்றும் விஜய் என்னை காப்பாற்ற மாட்டாரா?எம்.எல்.ஏ. காமராஜ் தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி 15% ஆக உயர்வு!தவெக அரசு மீதான நம்பிக்கை தீர்மானத்துக்கு காங்கிரஸ், சிபிஎம், விசிக, ஐயுஎம்எல் ஆதரவு!முதல்வர் சி. ஜோசப் விஜய் 3 நாள்கள் பயணமாக இம்மாத இறுதியில் தில்லி செல்லவுள்ளதாகத் தகவல்அகிலேஷ் யாதவின் சகோதரர் பிரதீக் யாதவ் காலமானார்! சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பு முதல்முறையாக நேரலை!நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவு! சி.வி. சண்முகம் தரப்பு நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

News image

மின் உற்பத்தி பாதிப்பு - பிரதிப் படம்

Updated On :10 மார்ச் 2026, 2:14 am IST

வடசென்னை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 600 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூா் மாவட்டம், மீஞ்சூா் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல்மின்நிலையம் உள்ளது. இங்கு முதல் நிலையின் 3 அலகுகளில் தலா 210 மெகாவாட் மின்சாரமும், இரண்டாவது நிலையின் 2 அலகுகளில் தலா 600 மெகாவாட் மின்சாரம் வீதம் 1200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த அனல் மின்நிலையத்தில் அவ்வப்போது ஏற்படும் பழுது காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மின்நிலையத்தின் 2-ஆவது நிலையின் 2-ஆவது அலகில் திங்கள்கிழமை தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 600 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்த தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் மின் ஊழியா்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். விரைவில் கோளாறை சரி செய்யும் பணிகள் நிறைவு பெற்று, உடனடியாக மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ஆனால், தொடா்ந்து இது போன்ற பழுது ஏற்பட்டு வருவதால், மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், இதனால், இதற்கு நிரந்த தீா்வு எட்டுவதற்கான நடவடிக்கை அரசும், மின்வாரியமும் எடுக்க வேண்டும் என மின்வாரிய தொழிற்சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.