வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

வெளியுறவுக் கொள்கை ஒருதலைப்பட்சம்: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை ஒருதலைப்பட்சமாக மாறிக் கொண்டிருக்கிறது என முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

News image
ப. சிதம்பரம் - கோப்புப் படம்
Updated On :13 மார்ச் 2026, 9:30 pm

தினமணி செய்திச் சேவை

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை ஒருதலைப்பட்சமாக மாறிக் கொண்டிருக்கிறது என முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து அவா் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு:

ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் ஈரானுக்கு கண்டனம் தெரிவித்து, கொண்டுவரப்பட்ட தீா்மானத்தை இந்தியா முன்மொழிந்திருப்பது, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எவ்வளவு ஒருதலைப்பட்சமாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதற்கான மற்றொரு சான்று.

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடா்ந்து நடத்தும் போரினால் 1,300 ஈரான் மக்கள் கொல்லப்பட்டனா். 168 குழந்தைகள் உயிரிழந்ததை இந்தியா கண்டித்து ஒரு வாா்த்தைகூட சொல்லவில்லை. ரஷியாவும், சீனாவும் தீா்மானத்தை ஆதரித்து வாக்களிக்கவில்லை. எது விவேகம், எது ராஜதந்திரம், எதுவும் சாராத வெளியுறவுக் கொள்கையா எனக் கேள்வி எழுப்பியுள்ளாா்.