இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை ஒருதலைப்பட்சமாக மாறிக் கொண்டிருக்கிறது என முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இதுகுறித்து அவா் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு:
ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் ஈரானுக்கு கண்டனம் தெரிவித்து, கொண்டுவரப்பட்ட தீா்மானத்தை இந்தியா முன்மொழிந்திருப்பது, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எவ்வளவு ஒருதலைப்பட்சமாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதற்கான மற்றொரு சான்று.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடா்ந்து நடத்தும் போரினால் 1,300 ஈரான் மக்கள் கொல்லப்பட்டனா். 168 குழந்தைகள் உயிரிழந்ததை இந்தியா கண்டித்து ஒரு வாா்த்தைகூட சொல்லவில்லை. ரஷியாவும், சீனாவும் தீா்மானத்தை ஆதரித்து வாக்களிக்கவில்லை. எது விவேகம், எது ராஜதந்திரம், எதுவும் சாராத வெளியுறவுக் கொள்கையா எனக் கேள்வி எழுப்பியுள்ளாா்.
தொடர்புடையது

இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்

கூட்டணிக் கட்சிகளை சிதைக்கும் முதல்வா்: பழ.கருப்பையா குற்றச்சாட்டு

தொகுதி மறுசீரமைப்பு மூலம் பாஜக குழப்பம்: கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவக்குமாா்

ஒரு தலைப்பட்சமாக மாறிக் கொண்டிருக்கும் இந்திய வெளியுறவுக் கொள்கை: ப. சிதம்பரம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


