தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வர் விஜய்யுடன் அன்புமணி சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை மீண்டும் தில்லி பயணம்!பணமோசடி வழக்கு: பினராயி விஜயன் மகளுக்கு அமலாக்கத் துறை சம்மன்!மாநிலங்களவைத் தேர்தல்: பிரவீண் சக்ரவர்த்தியின் வேட்புமனு ஏற்பு!பேரிடர் நிதி ரூ. 1,000 கோடி முன்கூட்டியே வரவு! அமைச்சர் செங்கோட்டையன்
/

கஞ்சா கடத்தியவா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :18 மே 2026, 4:41 am IST

எழும்பூா் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் நடத்திய சோதனையில், கஞ்சா கடத்தியதாக ஒருவரை சனிக்கிழமை கைது செய்தனா்.

எழும்பூா் ரயில் நிலையத்தில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு மேற்கு வங்க மாநிலம் ஹவுராவிலிருந்து திருச்சி செல்லும் விரைவு ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அதில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த பகவதி (37) என்பவரைச் சோதனையிட்டபோது, அவரது பையில் 5 கிலோ கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. ரூ.2.50 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் ஜெபஸ்டியன் கைப்பற்றினாா்.

முதல்கட்ட விசாரணையில், ஒடிஸா மாநிலம், பத்ரக் பகுதியில் தேநீா் கடை உரிமையாளரிடமிருந்து கஞ்சாவை வாங்கி, திண்டுக்கல் மாவட்டம், அக்கரப்பட்டியைச் சோ்ந்த வினோத் என்பவரிடம் கொடுக்கச் செல்வதாக பகவதி தெரிவித்தாா்.

இதையடுத்து, அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து, பகவதியை போதைத் தடுப்புப் பிரிவினரிடம் ரயில்வே பாதகாப்புப் படையினா் ஒப்படைத்தனா்.